தமிழ்நாட்டில் இன்றும் புதிதாக ஆயிரத்து 384 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து மொத்த தொற்றாளர்களது எண்ணிக்கை 27 ஆயிரத்து 256 ஆக அதிகரித்துள்ளது.
வழமை போன்று சென்னையில் பாதிப்பு தொடர்ந்தும் உச்சமாக இருந்து வருவதையிட்டு தமிழ்நாட்டு பாதிப்பு அதிகரிப்பை தொடர்ந்தும் சந்தித்து வருகிறது.
அந்த வகையில் இன்றும் (ஜூன்-4) சென்னையில் ஆயிரத்து 72 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதை அடுத்து மொத்த தொற்றாளர்களது 18 ஆயிரத்து 693 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை பாதிப்பு உள்ளடங்கலாக தமிழ்நாட்டில் இன்று ஆயிரத்து 384 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதை அடுத்து மொத்த தொற்றாளர்களது எண்ணிக்கை 27 ஆயிரத்து 256 ஆக அதிகரித்துள்ளது.
இதே போன்று தமிழ்நாட்டில் இன்று 12 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து மொத்த உயிரிழப்பு 120 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை 14 ஆயிரத்து 901 பேர் குணமடைந்து திரும்பியுள்ள நிலையில் தற்போது 12 ஆயிரத்து 132 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை